follow the truth

follow the truth

April, 30, 2025
Homeஉலகம்காற்று மாசுபாட்டினால் லாகூர் பாடசாலைகள் ஒரு வாரத்திற்கு பூட்டு

காற்று மாசுபாட்டினால் லாகூர் பாடசாலைகள் ஒரு வாரத்திற்கு பூட்டு

Published on

காற்று மாசுபாடு காரணமாக பாகிஸ்தானின் லாகூரில் உள்ள பாடசாலைகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்படி, ஒரு வார காலத்திற்கு பாடசாலைகளை மூடுவதற்கு பாகிஸ்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அலுவலகப் பணியாளர்களில் 50% பேர் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பாகிஸ்தான் சுகாதார அதிகாரிகள் மக்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த மாதம் முதல் பாடசாலை மாணவர்களின் வெளிப்புற நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளதுடன் பாடசாலை நேரமும் திருத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமின்றி, மோட்டார் ரிக்‌ஷாக்கள், ஃபில்டர்கள் இல்லாமல் பார்பிக்யூ வணிகங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமாக கருதப்படும் லாகூர், உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் இரண்டாவது முறையாக நேற்று (03) முதலிடம் பிடித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து – 400 க்கும் அதிகமானோர் காயம்

ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 420 பேர்...