follow the truth

follow the truth

April, 30, 2025
Homeஉலகம்250 கிராம் உருளைக்கிழங்கு காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு (வீடியோ)

250 கிராம் உருளைக்கிழங்கு காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு (வீடியோ)

Published on

சமையலுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 250 கிராம் உருளைக்கிழங்கு திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு செய்த நபரொருவர் தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கோட்வாலி நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது, இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மன்னபுர்வா பகுதியைச் சேர்ந்த விஜய் வர்மா என்ற நபர் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவிற்கு தொடர்பு கொண்டு இந்த திருட்டு குறித்து முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி பொலிசார் வந்து விசாரித்தபோது 250 கிராம் உருளைக்கிழங்கு திருட்டு போனதாக தெரிவித்துள்ளார்

சமைப்பதற்காக உருளைக்கிழங்குகளை ஒதுக்கி வைத்ததாகவும், ஆனால் திரும்பி வந்து பார்த்தபோது அவற்றை காணவில்லை என்றும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்

இதுபற்றி யாரேனும் சந்தேகப்படுகிறீர்களா என பொலிசார் அவரிடம் கேட்டபோது, ​​பொலிசார் கண்டுபிடித்து விடுவார்கள் என நம்புவதாக கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து – 400 க்கும் அதிகமானோர் காயம்

ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 420 பேர்...