follow the truth

follow the truth

October, 1, 2024
Homeஉள்நாடுபண்டிகைக் காலத்தில் மதுபானசாலைகளை திறக்கத் தடை

பண்டிகைக் காலத்தில் மதுபானசாலைகளை திறக்கத் தடை

Published on

நத்தார் பண்டிகையின்போது ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்படவில்லை என கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

நத்தார் தினத்தன்று சுற்றுலா சபையினால் அங்கீகரிக்கப்பட்ட தங்குமிட வசதிகள் கொண்ட ஹோட்டல்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரமே மதுபானம் வழங்குவதற்கு கடந்த காலங்களில் அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு நத்தார் தினத்தன்று மதுபானம் வழங்குவதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக இதுவரையில் எவ்வித கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இது தொடர்பாக இதுவரை தீர்மானமும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

ஹங்வெல்ல நிரிபொலவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.    

லெபனான் மற்றும் சிரியாவிற்கு பயணிப்பதை தவிர்க்குமாறு ஆலோசனை

மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்கான பயணிப்பதை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது லெபனான்...