follow the truth

follow the truth

October, 28, 2024
HomeTOP2கடவுச்சீட்டு டோக்கன் பெற மீண்டும் நீண்ட வரிசை

கடவுச்சீட்டு டோக்கன் பெற மீண்டும் நீண்ட வரிசை

Published on

பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் தமது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக மீண்டும் நீண்ட வரிசையில் காத்து நிற்பதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடவுச்சீட்டுகளைப் பெற மீண்டும் டோக்கன் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த காலங்களில் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்பட்டிருந்ததுடன், புதிய அரசாங்கம் அந்த நெருக்கடி முடிவுக்கு வரும் என வெளிவிவகார அமைச்சர் அறிவித்தார்.

எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கத்தினால் இந்த நெருக்கடிக்கு உரிய தீர்வை இதுவரை வழங்க முடியவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அதிகாலை 4 மணிக்கே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக வந்து வரிசையில் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முறையற்ற கொள்முதல் நடவடிக்கைகளை தடுத்து மோசடி மற்றும் ஊழலை தவிர்க்க நடவடிக்கை

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவை பலப்படுத்துவதற்கான முறையான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின்...

சந்தையில் வீழ்ச்சியடைந்த முட்டையின் விலை

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சந்தையில் முட்டை விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (28) சிவப்பு முட்டை ஒன்று 36...

திடீரென கத்தார் பறந்த இஸ்ரேலின் ‘மொசாட்’ தலைவர்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தில் உள்ள நிலையில், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைவர் கத்தாருக்கு பயணம்...