follow the truth

follow the truth

October, 27, 2024
HomeTOP1இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்

Published on

ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் குறித்து இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார, ஈரான் மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தொடர்பில் கவனத்தை ஈர்த்து இதனை வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தற்போது விடுமுறைக்காக இலங்கை வந்துள்ள இலங்கையர்களை இஸ்ரேலுக்கு பிரவேசிப்பதற்காக வழங்கப்பட்ட விசாக்கள் காலாவதியாகும் 02 அல்லது 03 நாட்களுக்கு முன்னர் இஸ்ரேலுக்கு திரும்புமாறு தூதுவர் அறிவிக்கின்றார்.

அவ்வாறாயின், சில காரணங்களால் தனது விமானம் இரத்து செய்யப்பட்டாலும், நாளை மறுதினம் அல்லது வீசா காலாவதியாகும் முன் இஸ்ரேலுக்கு வர முடியும் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலை காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல விமானங்கள் இஸ்ரேலுக்கான விமானங்களை இரத்து செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை செல்ல விரும்புபவர்கள் விசா பெறாமல் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது.

கடந்த சில வாரங்களாக இஸ்ரேலில் நீண்ட விடுமுறை காணப்பட்டமையே வீசா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டமைக்கான காரணம் என இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானின் தெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று இஸ்ரேல் சுமார் 100 விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது.

அங்கு எழுந்த பாதுகாப்பின்மையை கருத்தில் கொண்டு ஈரானும் தனது வான்வெளியை சில மணி நேரம் மூட நடவடிக்கை எடுத்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம்

இந்த நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாதுகாப்பு...

ரயில்வே திணைக்களத்தினால் குழு நியமனம்

காட்டு யானைகள் ரயில்களில் மோதப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காகத் ரயில்வே திணைக்களம் குழுவொன்றை நியமித்துள்ளது. அதன் பரிந்துரைகளின் அடிப்படையில்,...

“கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை”

கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என...