follow the truth

follow the truth

October, 25, 2024
HomeTOP1ஜனாதிபதி மற்றும் தென் ஆபிரிக்க உயர்ஸ்தானிகர் சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் தென் ஆபிரிக்க உயர்ஸ்தானிகர் சந்திப்பு

Published on

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் செண்டில் எட்வின் ஷோக் (Sandile Edwin Schalk) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று(25) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றிக்கு தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவின் வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதியிடம் கையளித்த தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர், ஜனாதிபதியுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, இலங்கைக்கு வந்திருக்கும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிரஜைகளின் பாதுகாப்பு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அதேபோல் இலங்கையின் யானை – மனித மோதலுக்கு தீர்வு தேடுவதற்காக தென்னாபிரிக்காவிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய ஒத்துழைப்பு தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

தெற்காசியாவில் செயற்படுத்தப்படும் சமாதான மற்றும் தேசிய மறுசீரமைப்பு செயற்பாடுகளை இலங்கையிலும் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.

இலங்கை வணிக சபையுடன் இணைந்து சர்வதேச வர்த்தகத்தை வலுப்படுத்துதல் தொடர்பில் ஒத்துழைப்புடன் செய்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதுடன், இலங்கையின் பாதுகாப்பு, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளின் மேம்பாட்டிற்கும் தென்னாபிரிக்கா ஒத்துழைப்பு வழங்குமென உயர்ஸ்தானிகர் செண்டில் எட்வின் ஷோக் உறுதியளித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரிசி விலை தொடர்பான சிக்கல் – ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

அரிசி விலை தொடர்பான சிக்கலைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து விவசாய அமைச்சு மற்றும் நெல்...

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என பதிவுத் தபாலில் அனுப்பப்பட்ட இரண்டு கடிதங்களின் அடிப்படையில்...

ரயில்வே ஊழியர்களுக்கு இலவச ரயில் அனுமதிச் சீட்டு

அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் அவர்கள் வசிக்கும் பகுதிக்கும் பணியிடத்திற்கும் இடையில் பயன்படுத்த இலவச ரயில் அனுமதிச் சீட்டு வழங்கப்படும்...