follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉள்நாடுபிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு இடையில் விசேட கூட்டம்

பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு இடையில் விசேட கூட்டம்

Published on

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களுக்கு இடையில் இன்று காலை 10 மணியளவில் அலரி மாளிகையில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதேவேளை, இந்த கலந்துரையாடலில் அமைச்சர்களான டலஸ் அழகபெரும, ரமேஷ் பத்திரன மற்றும் உதய கம்மன்பில ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன் காரணமாக இன்றைய தினம் அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெறாதென அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் நோக்கி சென்றிருந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த விசேட கலந்துரையாடலின் போது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

”ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு” வரும் பக்தர்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

புனித தலதா மாளிகைக்கு வழிபாட்டிற்காக வரும் பக்தர்கள், பொலிதீன் உள்ளிட்ட உக்காத பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும், தலதா...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நியமனம்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக கமல் அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின்...

பிரதமருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் சபாநாயகர் எழுத்து மூலம் விடுத்துள்ள அறிவிப்பு

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்படவுள்ள குழுவிற்கு உறுப்பினர்...