follow the truth

follow the truth

October, 18, 2024
Homeவிளையாட்டு"எமக்கு இன்னும் சில வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை"

“எமக்கு இன்னும் சில வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை”

Published on

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை வென்றமை மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 அணியின் தலைவர் சரித் அசலங்க தெரிவித்துள்ளார்.

போட்டியின் முடிவில் நேற்று (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அணியில் நிலையான குழு ஒன்றினை தாம் இப்போது கொண்டிருப்பதன் மூலம் இந்த வெற்றியைப் பெற முடிந்தது என்று அங்கு அவர் கூறினார்.

மேலும் பல போட்டிகள் வர உள்ளதாகவும், அதிலும் சிறப்பாக விளையாடுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

எமக்கு இன்னும் சில வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை எனவும், ஆட்களை பெற்றால் நாம் ஒரு அணியாக சிறந்து விளங்க முடியும் எனவும் சரித் அசலங்க தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் எங்கள் துடுப்பாட்ட வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஏதும் உபாதைகள் ஏற்பட்டாலும் பெத்தும் நிசங்க எதிர்வரும் போட்டிகளில் பங்கேற்பார் என சரித் அசலங்க மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 வீரர்கள் கொண்ட அணிக்கு சரித் அசலங்க...

உபுல் தரங்கவுக்கு எதிரான பிடியாணைக்கு இடைக்காலத் தடை

ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால், கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர்...

ஹத்துருசிங்க உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கம்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த சந்திக ஹதுருசிங்கவின் சேவையை ஒழுக்காற்று காரணங்களுக்காக பங்களாதேஷ் கிரிக்கெட் அதிகாரிகள்...